2015ம் ஆண்டில் 32,077 பாலியல் பலாத்கார வழக்குகள்!!

497

1 (9)

நாடு முழுவதும் 2015 ஆம் ஆண்டில் 32,077 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று இந்திய மாநிலங்களவையில் நேற்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நேற்று மாநிலங்களவையில் இந்திய மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பிரதிபாய் சவுத்ரி கூறியதாவது, தேசிய குற்ற ஆவண காப்பகம் அளித்த தகவலின் படி, கடந்த ஆண்டு 32,077 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன.இவற்றில் 1,706 வழக்குகள் கூட்டு பாலியல் பலாத்கார வழக்குகளாகும்” என்று தெரிவித்தார்.