வவுனியாவில் பாடசாலை சென்ற சிறுவனைக் காணவில்லை : தாயார் கண்ணீர்!!(காணொளி)

964

20160428_112821வவுனியா தரணிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது பாடசாலை மாணவனை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா பெரியகோமரசங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்விபயிலும் வடிவேல் ரவிக்குமார் என்ற 13 வயது பாடசாலை மாணவன் 25.04.2016 அன்று பாடசாலைக்குச் சென்று இன்றுவரை வீடு திரும்பவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

25.04.2016 அன்று குறித்த சிறுவன் தான் பாடசாலைக்குச் சென்று கல்வி கற்கமாட்டேன் எனவும், தான் வேலைக்கு செல்லப் போவதாவும் தாயரிடம் தெரிவித்துள்ளான்.

மகனை பாடசாலைக்கு செல்லும்படி கூறிவிட்டு மாலை தாயார் விடு வந்த பொழுதும் மகன் வீடு திரும்பவில்லை என தாயார் தெரிவித்தார்.

குறித்த பாடசாலைச் சிறுவனைக் கண்டால் உடனே கீழுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

வடிவேல் ராஜேஸ்வரி
077 – 2101553
077 – 2510154
077 – 0545615

20160428_112259 20160428_113315