தமது உழைப்பின் மூலம் இவ் உலகை உருவாக்கிய உலகத் தொழிலாளர் தினமான மேதினம் இன்று உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
வவுனியாவிலும் இரு மாபெரும் மேதின ஊர்வலங்கள் நடைபெறவுள்ளன. வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் இருந்து ஒரு மேதின ஊர்வலமும், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து மற்றுமோர் ஊர்வலமும் நடைபெறவுள்ளன.
இதனை முன்னிட்டு வவுனியா முழுவதும் பலத்த பாதுகாப்புக் கடமைகளில் பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர். மோப்ப நாய்களின் உதவியுடன் ரோந்து நடவடிக்கைகளிலும் பொலிசார் ஈடுபட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வவுனியாவில் நடைபெறும் மேதினம் தொடர்பான அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள உங்கள் வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.