தனியாருக்கும் நாளை விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை!!

473

mcupload_5206c88b6f264

அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் நாளை விடுமுறை அளிக்குமாறு, அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே.செனவிரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ் வருடம் மே தினம் ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளதால் இதன்பொருட்டு நாளை விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, நாளை விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தொழிற்சங்கங்கள் மற்றும் பெரும்பாலான மக்கள் தம்மிடம் கோரியுள்ளதாகவும் டப்ளியூ.டீ.ஜே.செனவிரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும் நாளை அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்படவில்லை என, சுதேச விவகார அமைச்சு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.