வட மாகாண சபையின் அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு 250 பட்டதாரிகள் விண்ணப்பம்!!

250

NPC

வட மாகாண சபையின் அலுவலக உதவியாளர் பதவிகளுக்காக விண்ணப்பம் செய்தவர்களில் 250 விண்ணப்பதாரிகள் பட்டதாரிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வட மாகாண சபையில் அலுவலக உதவியாளர் பதவிக்காக 40 வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் அண்மையில் கோரப்பட்டிருந்தது.

மொத்தமாக இந்தப் பதவிக்காக 8460 பேர் நாற்பது பதவிகளுக்காக விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த விண்ணப்பதாரிகளில் 250 பேர் பட்டதாரிகள் எனவும் அதில் ஒருவர் வியாபார முகாமைத்துவ விசேட பட்டம் பெற்றுக் கொண்டவர் எனவும் அவர் அலுவலக உதவியாளர் பதவிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் மத்திய வங்கியின் அறிக்கையின் படி கடந்த ஆண்டில் வேலையற்றோர் தொகை கடந்த ஆண்டில் 4.3 வீதமாக காணப்பட்டதுடன் இந்த ஆண்டு அந்த தொகை 4.6 வீதமாக உயர்வடைந்துள்ளது.