மைதானத்தில் சண்டையிட்ட அம்பத்தி ராயுடு -ஹர்பஜன் சிங்!!(காணொளி)

616

1

மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 29ஆவது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியை மும்மை இந்தியன்ஸ் அணி வெற்றிகொண்டது.

இப்போட்டியில் மும்பை இந்தியன் அணிக்காக விளையாடி வரும் ஹர்பஜன் சிங் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோருக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வீசிய 10.4 ஆவது பந்தை எதிர்கொண்டு துடுப்பெடுத்தாடிய சவுரப் திவாரி நான்கு ஓட்டங்களை பெற்றார். நான்கு ஓட்டங்களை தடுக்க முற்பட்ட ராயுடுவால் பந்தை தடுக்க முடியாமல் போனது.

இதனையடுத்து ஹர்பஜன் சிங் ராயுடுவை பார்த்து தகாத வார்த்தைகளால் ஏசினார். இதனை அவதானித்த ராயுடு உடனே கோபம் கொண்டு ஹர்பஜனை நோக்கி வந்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார். அந்த காட்சி பதிவான காணொளி உங்களுக்காக..

2