வீதியைவிட்டு விலகி மரத்துடன் மோதிய பஸ் : 8 பேர் படுகாயம்!!

872

Bus

இறக்குவானை – கரன்கெடிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.

பெல்மடுல்ல நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது சாரதி உள்ளிட்ட எட்டுப் பேர் காயமடைந்த நிலையில் இறக்குவானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் நான்கு பெண்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.