தலைவா படம் வெளியாகாத விரக்தியில் 20 வயது இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!

685

hang

விஜய்யின் தலைவா படம் வெளியாகாததால் அவரது ரசிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம், காசிநஞ்சயகவுண்டன் புதூரை சேர்ந்த ஆனந்தன் மகன் விக்ரம் என்ற விஷ்ணுகுமார் (20).

இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். விஷ்ணு நேற்று நடிகர் விஜய் நடித்துள்ள தலைவா படத்தை பார்க்க ஆவலாய் இருந்துள்ளார். ஆனால் தலைவா படம் வெளியாகவில்லை.

இதனால் விஷ்ணுகுமார் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். நண்பர்களிடம் பேசிவிட்டு இரவு வீட்டுக்கு சென்ற விஷ்ணுகுமார் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுப்பற்றி அவரது நண்பர்கள் மற்றும் உறவினரிடம் விசாரித்ததில் தலைவா படம் ரிலீஸாகாததால் விஷ்ணு மகிவும் கவலையுடன் இருந்தார். இதுப்பற்றி எங்களிடம் சொல்லி வருத்தப்பட்டார்.

அதனால்தான் அவர் தற்கொலை செய்து‌ கொண்டார் என தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து அறிந்த துடியலூர் பொலிஸார் விஷ்ணுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தலைவா படம் ரிலீஸாகாததால் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது ‌கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.