
மட்டக்களப்பு ஆரையம்பதியில் எட்டு வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் 16 வயது சிறுவனை கைது செய்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
குறித்த சிறுமியின் மாமா உறவினரான சிறுவனே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி, வைத்திய பரிசோதனைக்காக ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சிறுவன், கடந்த ஒரு வருடகாலமாக குறித்த சிறுமியை இவ்வாறு துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை காத்தான்குடிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





