வவுனியாவில் யானையிடம் இருந்து உயிர் தப்பிய ஊடகவியலாளர்கள்!!

764

Elephant

நஞ்சடித்த பள்ளம் ஆற்றுப் பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட வவுனியா ஊடகவியாளர்கள் யானையிடம் இருந்து உயிர் தப்பிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா பெரியபுளியங்குளம் பகுதியில் இருந்து 6 கிலோமீற்றர் தொலைவில் காடு மற்றும் வயல் நிலங்களை அண்டி அமைந்துள்ள நஞ்சடித்த பள்ளம் பகுதியில் செய்தி சேகரித்து கொண்டிருந்த போது அங்கு நீர் அருந்துவதற்காக யானை ஒன்று வந்துள்ளது.

இதனையடுத்து குறித்த ஊடகவியலாளரும், விவசாயிகளும் பாதுகாப்பாக பின்வாங்கி மறைந்து கொண்டனர். நீண்ட நேரமாக அப்பகுதியில் மறைந்திருந்த ஊடகவியலாளர்கள் யானை சென்ற பின் விவசாயிகளின் துணையுடன் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.