வவுனியா பொது வைத்தியசாலையில் கடந்த 32 வருடங்களாக வெளிநோயாளர் இரத்தப் பரிசோதனை பிரிவில் தாதிய உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் திருமதி மாலினி குஸ்மலதா அவர்களின் சேவையினை பாராட்டும் முகமாக நேற்று முன்தினம் (01.05.2016) வவுனியா பொது வைத்தியசாலையி பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தலைமையில் சேவை நலன் பாராட்டு நிகழ்வு இடம்பெற்றது.
இன் நிகழ்வில் அன்னார் ஓய்வு பெற்றுச் செல்வதையிட்டு அன்னார் ஆற்றிய சேவைக்காக நினைவுப் பரிசு வழங்கி வைக்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் வெளிநோயாளர் பரிவு வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள், சிற்றூழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.






