சிங்கப்பூரில் பெண்ணை துஷ்பிரயோகம் செய்த இலங்கை மாணவருக்கு சிறை!!

580

Lift

சிங்கப்பூரில் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட இலங்கை மாணவர் ஒருவர் 10 வாரங்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

புத்திக்க பத்மகுமார எனும் 28 வயதான அவர், அந்த நாட்டின் வீடமைப்பு மற்றும் அதிகார சபையின் கட்டடத்தில் இருந்த லிப்டுக்குள் வைத்து, கடந்த ஏப்ரல் 13ம் திகதி 33 வயதான பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

பின்னர் அப் பகுதிகளில் இருந்த கெமராப் பதிவுகளின் அடிப்படையில் ஐந்து நாட்கள் கழித்து குறித்த மாணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தான் ஒரு வருட டிப்ளோமா பாடநெறியை பயின்று வருவதாகவும், சம்பவம் இடம்பெற்ற போது மதுபோதையில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.