புதிதாக பல மருந்து வகைகளை தயாரிக்க சுகாதார அமைச்சு முடிவு!!

456

medicine-tablet

இந்த வருடம் தொடக்கம் அரச மருந்தாக்கக் கூட்டுதாபனம் புதிதாக 19 மருந்துகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை மருந்து உற்பத்தித் திறனை அதிகரிப்பது தொடர்பில் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் சயுரு சமரசுந்தர தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரத்மலானையில் அமைந்துள்ளதைப் போன்று வத்தளை மற்றும் கண்டி பிரதேசங்களிலும் மருந்து தயாரிப்பு தொழிற்சாலைகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தின் மூலம் தற்போது வரை 48 மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வருடத்தின் காலாண்டுக்குள் மாத்திரம் 38 மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.