பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டு உயிர் காப்பு உபகரணங்களின் தயவுடன் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கும் 4 மாத குழந்தையை விட்டு இரு வளர்ப்பு நாயொன்று நகர மறுத்த மனதை நெகிழ வைக்கும் சம்பவம் அமெரிக்க மின்னேஸோரா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.நோரா ஹோல் என்ற மேற்படி குழந்தைக்கு பாரிசவாத பாதிப்பால் மூளையும் நரம்பு மண்டலமும் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அந்தக் குழந்தைக்கான உயிர் காப்பு உபகரணங்களின் செயற்பாட்டை நிறுத்தி அந்தக் குழந்தையை அமைதியாக மரணத்தை தழுவச் செய்வதற்கு அனுமதிக்க அதன் பெற்றோர்களான ஜோனும் மேரியும் தீர்மானித்தனர்.இதனையடுத்து அந்தக் குழந்தை அதற்கு மிகவும் பிடித்தமான இரு வளர்ப்பு நாய்களை அதன் இறுதித் தருணத்தில் காண்பிக்க அவர்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் அனுமதியைக் கோரினர்.
அவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதியளிக்கவும் கடந்த வெள்ளிக்கிழமை இரு வளர்ப்பு நாய்களும் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன.இதன்போது அந்த இரு நாய்களில் ஒன்று அந்தக் குழந்தையை விட்டு பிடிவாதமாக நகர மறுத்து அங்கிருந்த அனைவரது இருதயத்தையும் நெகிழ வைத்துள்ளது.