வவுனியா நெடுங்கேணிக்கு அருகில் நெடுங்கேணி ஒட்டுசுட்டான் வீதியில் இன்று(04.05.2016) காலை இடம்பெற்ற விபத்தில் பட்டா வாகனம் ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வாகனத்தின் சாரதி வேகமாக வாகனத்தை செலுத்திய அதேவேளை கைத்தொலைபேசியையும் பயன்படுத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இதனால் வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியின் அருகில் இருந்த மதகு ஒன்றின் மீது மோதியதில் வாகனம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
இவ் விபத்தில் வாகனத்தின் சாரதி அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள அதேவேளை யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சாரதிகளின் கவலையீனத்தால் அண்மைய காலங்களில் இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
=





