வவுனியாவில் 15 வயதுச் சிறுமி கர்ப்பம் : இளைஞன் கைது!!

558

Prag

வவுனியா – செட்டிகுளம், கங்காரங்குளம் பிரதேசத்தில் சிறுமியைக் கர்ப்பமாக்கிய இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கங்காரங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியே இவ்வாறு கர்ப்பமாக்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமி சில நாட்களாக அருகிலுள்ள காட்டுக்குள் பேய் பிடித்தது போல நடமாடித்திருந்ததாகவும் கடந்த மூன்று நாட்களாக வீட்டுக்கு வராமல் காட்டுக்குள்ளேயே இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காட்டுக்குள் சிறுமியைக் கண்டுபிடித்த பெற்றோர் சிறுமியை செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதன்போது சிறுமி 3 மாதக் கர்ப்பிணியாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட செட்டிகுளம் பொலிஸார், அதே இடத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞனைக் கைதுசெய்துள்ளனர்.