சிறுநீர் கழித்த விவகாரம் : பனேசரின் தாயார் ஆவேசம்!!

326

Monty-Panesar

குடிபோதையில் பாதுகாவலர்கள் மீது சிறுநீர் கழித்தது பெரிய விடயமே அல்ல. அதனை ஊடகங்கள் தான் பெரிதுபடுத்துகிறது என மொன்டி பனேசரின் தயார் தெரிவித்தார்.

இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மொன்டி பனேசர். இந்திய வம்சாவளி வீரரான இவர், குடிவெறியில் கிளப் பாதுகாவலர்கள் மீது, சிறுநீர் கழித்து சிக்கலில் சிக்கியுள்ளார். இதனால் இவரது கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

இதுகுறித்து பனேசரின் தாயார் குர்ஷரன் கவுர் கூறுகையில்

“பனேசர் செய்தது ஒரு விடயமே அல்ல. இதை ஊடகங்கள் தான் பெரிது படுத்துகின்றன. பெற்றோர் என்ற முறையில் இதற்காக வருத்தப்படுகிறோம், அவ்வளவு தான். மற்றபடி இது முடிந்து போன பிரச்னை. இதுகுறித்து வேறெதுவும் சொல்ல விரும்பவில்லை” என்றார்.