வவுனியா கணேசபுரம், மணிபுரம் வீதிகளின் நிலைமையை ஆய்வு செய்த சுகாதார அமைச்சர்!!

652

 
வவுனியா மாவட்டத்தில் நீண்டநாட்களாக திருத்தப்படாது குண்டும் குழியுமாகவுள்ள கணேசபுரம், மணிப்புரம், சமயபுரம் கிராமங்களின் உள்ளக வீதிகளின் நிலைமையை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் நேற்று முன்தினம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்தப் பகுதிகளுக்கு சென்ற அமைச்சர் அங்குள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது நீண்டநாட்களாக திருத்தப்படாதுள்ள வீதிகளில் பிரயாணம் செய்யும் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் பற்றி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் உள்ளுராட்சி மன்றங்களின் வீதிகளை புனரமைப்பதற்கான விசேட நிதி மாகாண சபையினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முன்னுரிமை அடிப்படையில் இந்த
வீதிகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

அண்மையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமகன் ஒருவர் இதுதொடர்பில் கருத்து தெரிவித்தமை செயலகமட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

G-1 G2 G3 G4