
மனித உடலுக்கு தீங்கினை ஏற்படுத்தும் இறக்குமதி செய்யப்பட்ட மீன்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக, பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு – சிலாபம் ஆகிய பகுதிகளில் இவை அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக, அந்த சங்கத்தின் செயலாளர் செனரல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மீன்களின் உடலில் அதிகளவு ஈயம் இருப்பதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும், இவை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாக, பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவற்றைக் கொள்வனவு செய்யும் போது அதிக அவதானத்துடன் இருக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





