மேலதிக வகுப்பு எனக் கூறி சுற்றுலா சென்ற இரு மாணவர்கள் சிக்கினர்!!

702

i3

மேலதிக வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு, இராவண எல்ல பகுதியில் நீராடிக் கொண்டிருந்த 11 வயதான இரு மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மொனராகலை – பின்னகொல பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

பாட்டியின் பாராமரிப்பில் இருந்த இவர்கள் மேலதிக வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு இராவண எல்ல பகுதிக்குச் சென்றுள்ளனர்.
அங்கு நீராடிக் கொண்டிருந்த அவர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது, மேலதிக வகுப்புக்கு செல்ல பஸ்ஸில் ஏறிய போது தூக்கி விட்டதால் எல்ல பகுதிக்கு வந்ததாக கூறியுள்ளனர்.

மேலும் இவர்கள் வசம் இருந்து 1200 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரது பாட்டியை அழைத்து சிறுவர்கள் இருவரையும் அவரிடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.