பெண்களுக்கு வாந்தி ஆண்களுக்கு வதந்தி : செந்தில் சொன்ன விளக்கம்!!

1008

Senthil

அதிமுக கட்சியை ஆதரித்து தமிழ்நாடும் முழுவதும் நடிகர் செந்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக நேற்று வட்ஸ் அப்பில் செய்தி பரவியதால் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் இந்த இறப்பு செய்தி குறித்து பேட்டியளித்த நடிகர் செந்தில், ஆண்டவன் அருளால் நான் நலமுடன் இருக்கிறேன்.
எனது பிரசாரத்தை தடுப்பதற்காக எதிரிகள் வேண்டுமென்றே இதுபோன்ற செய்திகளை பரப்புகின்றனர்.

யார் வதந்தியை கிளப்பினால் என்ன ஆண்டவன் என்ற ஒருவர் இருக்கிறார், அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார், பெண்கள் வாந்தி எடுத்தால் நல்லது என்று சொல்வார்கள், அதுபோல ஆண்களுக்கு வதந்தி வந்தால் நல்லது.

அதனால் என்னை பற்றி சில வதந்திகள் வந்துள்ளன, இதனை யாரும் நம்பவண்டாம், இப்படி வதந்திகளை கிளப்ப கிளப்ப, நான் நூறு வயது வரை வாழ்வேன் என கூறியுள்ளார்.