சச்சின் காலில் விழுந்த யுவராஜ் சிங்!!

282

458469-sachin-yuvi-edit

ஐஎபில் தொடரில் மும்பை அணிக்கு எதிரான நேற்றைப் போட்டியின் போது ஐதராபாத் அணியின் வீரர் யுவராஜ் சிங், சச்சின் டெண்டுல்கர் காலில் விழுந்து ஆசி பெற்றது ரசிகர்களை நெகிழ்ச்சியடைச் செய்தது.முன்னாள் இந்திய வீரர் சச்சின் மீது அளவில்லாத பாசமும் மரியாதையும் வைத்திருக்கும் வீரர்களின் யுவராஜ் சிங்கும் ஒருவர்.

இதனாலே அவரை பார்க்கும் போது எல்லாம் மைதானம் என்று கூட பாராமல் அவரது காலில் விழுந்து ஆசி பெறுவார் யுவராஜ். நேற்று நடந்தப் போட்டியிலும் இந்த சம்பவம் நடந்தது.நேற்றையப் போட்டியில் ஐதராபாத் அணி தவான், வார்னர், யுவராஜ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தாலும், நெஹ்ரா, ரஹ்மானின் அபார பந்துவீச்சாலும் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் பெவிலியன் திரும்பினர். அப்போது அங்கிருந்த சச்சின் மும்பை வீரர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார்.இந்நிலையில சச்சின் காலை தொட்டுக் வணங்கினார் யுவராஜ். உடனே சச்சின் நெளிந்தபடி அவரை தடுத்து நிறுத்தினார். இதை சக வீரரான கனே வில்லியம்சன் ஆச்சரியத்தோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இந்தப் போட்டியில் யுவராஜ் சிங் 23 பந்தில் 2 சிக்சர்கள், 3 பவுண்டரி என 39 ஓட்டங்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.