வவுனியா நகரில் காணப்படும் குப்பைகளை சுத்தப்படுத்தும் செயற்பாட்டுத் திட்டத்தின்கீழ் இன்று (10.05.2016) காலை 9.30 மணிமுதல் சிரமதானப் பணி நடைபெற்றது.
இச் சிரமதானப் பணியில் வவுனியா பொலிசார், வர்த்தக நிலைய ஊழியர்கள், நகரசபை ஊழியர்கள், சுகாதாரப் பணிமனை உத்தியோகத்தர்கள் மற்றும் அரச ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






