சர்வதேச அன்னையர் தினமான (08.05.2016) அன்று தங்கள் பிள்ளைகள், கணவர் உட்பட உறவுகளை காணாமல் தேடிஅலையும் 4 குடும்ப அன்னையர்களின் குடும்பங்களுக்கு கனடாவை தளமாக கொண்டு இயங்கும் வன்னிப் பட்டறை அமைப்பின் தலைவர் த.பிரதீபன், தமிழ் விருட்சம் அமைப்பின் ஊடாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் உலர் உணவுப் பொதிகள், ஆடைகள் வழங்கினர்.
பிரதீபனின் இந்த உதவிகளை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் சென்று வழங்கி இருந்தனர்.
இறுதியில் அனைவரும் வன்னி ப் பட்டறைக்கும் பிரதீபன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டனர்.






