
பிரபல ஆங்கில ஊடகத்துக்கு தற்போது பேட்டியளித்துள்ள கருணாநிதி, கூறியிருப்பதாவது..
1957ம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் நான் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறேன். இதுவரை ஒருமுறைகூட தோல்வியை சந்தித்ததில்லை. இந்தமுறை வெற்றி பெற்றால் ஆறாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவேன் என்று கூறியுள்ளார்.
மேலும், முதலமைச்சர் பதவியை மு.க. ஸ்டாலின் விரும்பவில்லை, ஆறாவது முறையாக நான் முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதை விரும்புபவர்களுள் ஸ்டாலின் மிக முக்கியமானவர்.
இயற்கையாக எனக்கு ஏதாவது நேர்ந்தால்தான் மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் ஆக முடியும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.





