வெள்ளவத்தையில் ரயிலில் மோதி இருவர் பலி : இரத்மலானையில் ஒருவர் பலி!!

544

Train1

வெள்ளவத்தைப் புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் ரயிலில் மோதி பலியாகியுள்ளனர். சற்று நேரத்துக்கு முன்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்சமயம் இவர்களது சடலங்கள் வெள்ளவத்தைப் புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தைப் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் ரயிலில் மோதுண்டு மூன்று பேர் பலி

கொழும்பில் இன்று காலைஇடம்பெற்ற ரயில் விபத்துக்களில் மூன்று பேர் பலியாகினர். இந்த சம்பவங்கள் வெள்ளவத்தை மற்றும் ரத்மலானை ரயில் நிலையங்களுக்கு அருகில்இடம்பெற்றுள்ளன.

வெள்ளவத்தையில் ரயிலில்இறங்கி ரயில் பாதையை கடக்க முயன்ற இரண்டு பேர் ரயிலில்மோதுண்டுபலியாகினர்.

இதேபோன்றுஇரத்மலானை ரயில்நிலையத்துக்கு அருகிலும் ஒருவர் ரயிலில் மோதுண்டுபலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த வாரத்திலும் இரண்டு பாடசாலை மாணவிகள் தெஹிவளை பகுதியில் ரயிலில்மோதுண்டு பலியானமை குறிப்பிடத்தக்கது.