14 வயதான மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை!!

506

1 (53)

14 வயதான தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் தந்தை ஒருவரை கைது செய்வது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, சிலாபம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சிறுமியின் தாயார் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வேலை நிமித்தம் காரணமாக வௌிநாடு சென்றுள்ள நிலையில், அவர் தனது பாட்டியின் பொறுப்பில் இருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவரது பாட்டி தினக் கூலிக்கு வீட்டு வேலைக்குச் செல்லும் ஒருவர் எனத் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்தநிலையில், பாட்டி இல்லாத நேரம் சந்தேகநபர் வீட்டுக்குள் நுழைந்து சிறுமியை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.அதன் பின்னரும் சில சந்தர்ப்பங்களில் சந்தேகநபர் தனது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.இதேவேளை, இந்த விடயத்தை அறிந்த ஒருவர் தனது பெயரைக் குறிப்பிடாது சிலாபம் பொலிஸில் முறையிட்டுள்ளார்.மேலும், சந்தேகநபர் இதுவரை கைதுசெய்யப்பட்டவில்லை என்பதோடு, சிலாபம் பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.