
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பால் பதனிடல் நிலையம் நேற்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
இந்த பால் பதனிடல் நிலையம் கனடாவின் நிதி உதவியின் கீழ் ஜக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கனேடிய உயர்ஸ்தானிகர் செலி வைட்டிங் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பீட்டர் பட்ச்லர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.





