பாம்பு கடித்து கரிக்கட்டையாக மாறிய சிறுமியின் கால்!!

306

maxresdefault

விஷப்பாம்பு கடித்து விட்டால் 13 வயது சிறுமி ஒருவரின் கால் மிக ஒல்லியாக கரிக்கட்டை போன்று மாறியுள்ளது. வெனிசுலாவைச் சேர்ந்த சிறுமி ஒருவரை ஒரு மாதத்திற்கு முன்பு விஷப்பாம்பு ஒன்று காலில் கடித்துள்ளது. இதையடுத்து அந்த சிறுமிக்கு விஷத்தை முறிக்கும் மருந்தை கொடுக்காமல் ஆண்டிபயாட்டிக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாம்பு கடித்து ஒரு மாதம் கழித்து அவரது கால் கருப்பாக மாறியதோடு சுருங்கி போயுள்ளது. அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமியின் காலில் உள்ள செல்கள் இறந்து போய்விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து லிவர்பூல் மருத்துவர் அருண் கோஸ் கூறுகையில், சிறுமியின் காலை நீக்க வேண்டும் என்றும், காலை நீக்கினாலும் உடம்பு முழுவதும் உள்ள செல்கள் இறந்து அதனால் சிறுநீரகம் பாதித்து சிறுமி உயிரிழக்க கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.