இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பிற்கு பிரித்தானிய பிரதமர் பாராட்டு!!

507

Maithripala Sirisena-David Cameron

ஊழலற்ற நல்லாட்சியை உருவாக்குவதற்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரன் பாராட்டியுள்ளார்.

லண்டனில் நேற்று (12.05) நடைபெற்ற ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பின் போதே பிரித்தானிய பிரதமர் பாராட்டு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊழலற்ற உலகத்தை உருவாக்கும் நோக்கிலான ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில், ஊழலை ஒழிப்பதற்காக நடவடிக்கைகள் பலவற்றை எடுத்துள்ள தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்கின்றமை சிறப்பானதாகும் என்றும் பிரித்தானிய பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.