
மாரவில – தலவில, தொடுவாவ, ஒருவெல்பொல ஆகிய பிரதேசங்களில் கடலரிப்பு அதிகமாக இடம் பெறுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக தமது வீடுகள் உடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பி்ட்டுள்ளனர்.
இதை தடுக்கும் முகமாக கரையோர பாதுகாப்பு திணைக்களத்தால் தற்காலிக தீர்வாக கற்கள் போடும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.எனினும், அது போதுமானதாக இல்லை என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்கள்.உரிய அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.





