தற்கொலைக்கு முன் செல்பி எடுத்து வீடியோவாக வெளியிட்ட இளம்பெண்!!

503

Sucide

பிரான்சில் இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முன் தான் தற்கொலை செய்துகொள்ளும் வீடியோவை எடுத்து பெரிஸ்கோப் மூலம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பெயர் தெரியாத இளம்பெண் ஒருவர் பாரிசில் உள்ள புறநகர் ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். அந்த இளம்பெண் தற்கொலை செய்துகொள்ளும் வீடியோவில் தான் பலாத்காரம் செய்யப்பட்டதையும் பலாத்காரம் செய்தவர்களையும் பற்றி அந்த வீடியோவில் கூறியுள்ளார். மேலும் அவர்கள் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாக அதில் அவர் கூறியுள்ளார்.

அந்த பெரிஸ்கோப் வீடியோவை ஏற்கனவே யாரோ ஒருவர் பார்த்து தங்களுக்கு தகவல் கூறியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பெரிஸ்கோப் என்பது ஒரு ஸ்மார்ட்போன் செயலி. இந்த செயலி மூலம் டுவிட்டர் அக்கவுண்டை பயன்படுத்தி நேரடி ஸ்ட்ரீம் வீடியோ அனுப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து பாரிஸ் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.