
களுத்துறை, தொடாங்கொடை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கணவனால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.குடும்பத் தகராறு காரணமாகவே குறித்த பெண் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என்றுபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என பொலிஸார்குறிப்பிட்டுள்ளனர்.சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணின் கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்திவருகின்றனர்.





