வவுனியா புளியங்குளம், சின்னப்பூவரசங்குளம் அருள்மிகு மண்டபத்து பிள்ளையார் ஆலய புனராவர்த்தன பிரதிஸ்டா மகா கும்பாபிஷேகம் நாளை மறுதினம் (18.05.2016) நடைபெறவுள்ளது.
இன்று (16.05.216) கிரிகைகள் ஆரம்பமாகி நாளை (17.05.2016) எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்று நாளை மறுதினம் (18.05.2016) கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
போரினால் பாதிப்படைந்த இவ்வாலயத்தின் மூல மூர்த்தி இடப்பெயர்வின் போது காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது.
பக்தர்கள் தம்மால் முடிந்த பொருளுதவியையோ, பணவுதவியையோ வழங்குவதன் மூலம் யுத்தத்தில் பாதிப்படைந்த இவ்வாலயத்தை மீண்டும் மிளிரச்செய்ய உதவுமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.