அவரை பற்றி பேசாதீங்க – கிண்டலாக பதிலளித்த வடிவேலு!!

729

vadivelu

நேற்று நடை பெற்ற சட்டமன்ற வாக்கு பதிவில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். தமிழக மக்கள் அனைவரும் விறுவிறுப்பாக தங்களது வாக்குகளை பதிவு செய்து வந்த நிலையில், திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்களும் வாக்களித்தனர்.இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் நடிகர் வடிவேலு தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

பின்னர் பேசுகையில், மிக அற்புதமாக தேர்தல், பரீட்சை எழுதிவிட்டு முடிவுக்கு காத்திருப்பது போல் உள்ளது, யார் பாஸ் ஆவார்கள் என்று தெரியவில்லை.மிகவும் குழப்பமாக இருக்கும், ஓட்டுச் சாவடிக்கு சென்று தலையை செம்மறி ஆடு போல நன்றாக 3 முறை சிலுப்பி விட்டு தெளிவா ஓட்டுப் போடுங்கள்.நன்கு சிந்தித்து நம்ம நாட்டுக்கு நல்லது செய்பவர்களுக்கு உங்கள் வாக்கினை அளியுங்கள். 100% எல்லோரும் ஓட்டுப் போட வேண்டும். ஓட்டுப்போட்டு அனைவரும் நமது ஜனநாயக் கடமையை ஆற்ற வேண்டும். கள்ள ஓட்டு தவிர என்று ரிவித்துள்ளார்.பத்திரிக்கையாளர் ஒருவர் விஜயகாந்த் பற்றி கேட்டதற்கு ‘அந்தக் கடையை மூடுங்க’ என்று கூறிய வடிவேலு, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.