ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அன்னதான மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா எதிர்வரும் 21.05.2016 அன்று ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக, பிரதேச செயலாளர் திரு.உதயராசா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர் திரு.தியாகராசா மற்றும் பலர் கலந்து சிறப்பிக்கின்றனர்.
எனவே அனைத்து முருகப்பெருமான் அடியார்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறார்கள் ஆலய நிர்வாக சபையினர்.