தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில், இரு தொகுதிகளை தவிர்த்து 232 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளன.
134 தொகுதிகளை கைப்பற்றி அ.தி.மு.க வெற்றிப் பெற்றுள்ளது. தி.மு.க கூட்டணி 98 இடங்களை கைப்பற்றி பலமான எதிர்க்கட்சியாக உருவெடுக்கிறது.
1984ம் ஆண்டுக்குப் பின்னர், ஆட்சியில் இருந்த கட்சி மீண்டும் தேர்தலில் தொடர்ந்து வென்று ஆட்சியைப் பிடிப்பது இதுவே முதல் முறை.






