ரோனு புயல் நெருங்குகிறது : பலத்த மழை எச்சரிக்கை!!

1679

Ronu

சென்னை அருகே தென்மேற்கு வங்க கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மாறி, மத்திய மேற்கு வங்க கடலில் ஆந்திர மாநிலம், நெல்லூருக்கு தென்கிழக்கில் நிலைகொண்டது.

நேற்று அது புயல் சின்னமாக மாறி, மசூலிப்பட்டினத்துக்கு 125 கி.மீ. தென் கிழக்கிலும், விசாகப்பட்டினத்துக்கு 350 கி.மீ. தென்மேற்கிலும், காக்கிநாடாவுக்கு 225 கி.மீ., தென்மேற்கிலும் மையம் கொண்டது. அது மேலும் நகர்ந்து ஒடிசாவை நெருங்குகிறது.

இந்த புயலுக்கு ரோனு என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாக ஒடிசாவில் இன்று இடியுடன்கூடிய கன மழை பெய்யும்; பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.