நான் பயங்கரமான பேய் என பலாத்காரம் செய்ய முயன்றவர்களை மிரட்டிய சிறுமி!!

970

the-ghost-girl

இந்தியாவின் டெல்லியில் தன்னை பலாத்காரம் செய்ய வந்த நபர்களிடமிருந்து சிறுமி மிக சாதுர்யமாக தப்பித்துள்ளார்.

இந்தியாவின் டெல்லியில் இரவு 10 மணியளவில் 17 வயது மதிக்கத்தக்க சிறுமி நடந்து சென்றுள்ளார். இவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு ஆண்கள், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு சிறுமியை கடத்தி சென்றுள்ளனர்.

நடக்கப் போகும் விபரீதத்தை உணர்ந்து சிறுமி திடீரென பயங்கரமான குரலில் பேசியும், சிரித்தும் பேயை போன்று நடித்துள்ளார். இதனால் பயந்து போன ஒருவன் ஓட்டமெடுத்துள்ளான், குழப்பத்தில் நின்ற மற்றொருவனை பயமுறுத்துவற்காக குறித்த சிறுமி தன்னுடைய ரத்தத்தை முகத்தில் பூசிக் கொண்டு மிரட்டியுள்ளார், இவனும் பயந்து போய் ஓட்டமெடுத்துள்ளான்.

இந்த சம்பவம் பற்றி குறித்த சிறுமியின் தோழி பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

தற்போது வைரலாக பரவி வரும் இந்த போஸ்ட்டுக்கு பலரும் கருத்துகளை பகிர்ந்து வருவதுடன் சிறுமியின் சாதுர்யத்துக்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.