ஜெயலலிதா வெற்றி : திருப்பதி கோயிலுக்குச் சென்ற நடிகை நமீதா!!

615

Namitha

முதலமைச்சராக ஜெயலலிதா மீண்டும் வெற்றி பெற்றதற்காக நடிகை நமீதா, திருப்பதி கோயிலில் தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை நமீதா, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என தான் பிரார்த்தனை செய்திருந்தேன்.

தனது பிரார்த்தனை நிறைவேறியதை அடுத்து, ஏழுமலையானுக்கு தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளேன் என கூறியுள்ளார்.