மன்னாரில் விபத்து- 20 வயது இளைஞர் பலி..!

434

மன்னார் தாராபுரம் – எருக்கலம்பிட்டி பிரான வீதியில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம் பெற்ற விபத்தில் தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாராபுதத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் உழவு இயந்திரத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது எருக்கலம் பிட்டி வீதியூடாக தாராபுரம் கிராமத்திற்கு உழவு இயந்திரத்தை வேகமாக கொண்டு செல்ல முயற்சித்துள்ளனர்.

இந்நிலையில் உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் சென்றுள்ளது.

இதன்போது உழவு இயந்திரத்தின் பின்னால் இருந்த இரு இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

உழவு இயந்திரத்தில் இருந்த முஹம்மது லதீப் சதாத் (வயது-20) என்ற இளைஞர் தலையில் பலமாக தாக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.