மும்பையில் ஓடும் ரயிலில் பாதுகாப்பாக நிற்காமல் சாகசம் செய்ய முற்பட்ட சிறுவன் ஒருவன் நிலைத்தடுமாறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் தானேவிலிருந்து மும்பராவிற்கு சென்றுக்கொண்டிருந்த பயணிகள் ரயிலில் சயீத் மோஷின் ராஸா என்ற சிறுவனும் பயணம் செய்துக்கொண்டிருந்தான்.
14 வயதான இச்சிறுவன் ரயில் பேட்டியின் நுழைவாயிலில் ஒழுங்காக நிற்காமல், ஒரு காலில் மட்டும் தனது உடல் எடையை தாங்கி சாகசம் செய்ய முயற்சி செய்துக்கொண்டிருந்தான்.
சிறிது நேரத்திற்கு சரியாக கால்களை மாற்றி ரயிலிலிருந்து தொங்கிக்கொண்டிருந்த மோஷின் ரேதி பந்தர் என்னும் இடத்திற்கு அருகே ரயில் சென்றுக்கொண்டிருந்த போது நிலைத்தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தான்.
மோஷினின் உயிரிழப்பு குறித்து அவனது பெற்றோருக்கு தகவல் அளித்த போது அதிர்ச்சி அடைந்த அவர்கள் மோஷின் ரயிலில் சாகசம் செய்த போது விழுந்து இறந்ததை நம்ப முடியவில்லை. அமைதியான, பொறுப்பு மிக்க மகனாக தான் மோஷின் இருந்தான் என அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தனர்.
இதுதொடர்பாக தெரிவித்த பொலிஸ் அதிகாரி ரயிலில் சாகசம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்படுபவர்கள் மீது தற்கொலைக்கு முயற்சிததற்காக வழக்கு தொடரப்படும்.
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் எந்த விதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
இது போன்ற சம்பவங்களால் இளைய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கபடுவதால் பெற்றோர்கள் கூடுதல் கவனத்தோடு இருப்பது அவசியம் எனக் கூறியுள்ளார்.