முல்லைத்தீவு, அருள்மிகு வற்றாப்பளை கண்ணகை அம்மன் திருக்கோயிலின் இவ்வாண்டிற்கான வைகாசி விசாக பொங்கல் விழா, நேற்று (23.05.2016) நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ் விழாவில் நாடெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்கதர்கள் கலந்து சிறப்பித்தனர். வடக்கு, கிழக்கில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விசேட பஸ் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
பக்கதர்களின் வசதி கருதி கோவில் நிர்வாகத்தால் பல்வேறு சிறப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.