சிறந்த வீரர்களுக்கான கனவு அணியில் கும்ப்ளே, டிராவிட்..!!

329

kumble

சிறந்த வீரர்கள் அடங்கிய கனவு அணியில் கும்ளே, டிராவிட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் பிளாட்டினம் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இந்த விழாவின் சிறப்பம்சமாக கர்நாடகாவை சேர்ந்த 12 சிறந்த முன்னாள் வீரர்கள் அடங்கிய கனவு அணி தெரிவு செய்யப்பட்டது.
இந்த அணியை இந்திய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் கிர்மானி தெரிவு செய்தார்.

கனவு அணியின் அணித்தலைவராக வெங்கட்ராமன் சுப்ரமணியா தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும் ஓய்வு பெற்ற கும்ளே, டிராவிட் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

அணி விவரம்: சுப்ரமணியா(அணித்தலைவர்), ரோஜர் பின்னி, டிராவிட், விஸ்வநாத், பிரிஜேஷ் படேல், கிர்மானி(விக்கெட் காப்பாளர்), சுனில் ஜோஷி, கும்ளே, பிரசன்னா, சந்திரசேகர், ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத்.