வீராத் கோலிக்கு அர்ஜூனா விருது!!

333

kohli_sindhu_award

இந்திய அணியின் வீரர் வீராத் கோலிக்கு விளையாட்டு துறையின் உயரிய விருதான அர்ஜூனா விருது வழங்கப்படவுள்ளது.

விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கடந்த உலக கிண்ண போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் பெற்றுக் கொடுத்த ரஞ்சன் சோதி, கேல் ரத்னா விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் கோலி, சிந்து ஆகியோர் அர்ஜூனா விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை ஏற்று சிம்பாவே அணியுடனான தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியவர் கோலி.

சமீபத்தில் நிறைவடைந்த உலக பட்மிண்டன் போட்டியில் இந்தியா சார்பில் முதல் முறையாக ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்றவர் பி.வி. சிந்து. இவர்களுக்கான விருதுகள் வரும் 29ம் திகதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் வழங்கப்பட உள்ளன.