செட்டிகுளம் பூவரசங்குளம் பிரதான வீதியில் கொட்டப்படும் குப்பைகளால் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.
வவுனியா பூவரசங்குளம் பிரதான வீதியில் குப்பைகள் மற்றும் கட்டிடப்பொருட்களின் குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்கள் என்பன கொட்டப்படுவதனால் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக வர்த்தகர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், நான் இவ் வீதியூடாக தினசரி பயணிக்கின்றேன். இவ்வாறு வீதியில் குப்பைகள் கொட்டுவதனால் சுற்றுப்புற சூழல் மாசடைவதுடன் துர்நாற்றமும் வீசுகின்றது. இவ் விடயத்தில் அரச அதிகாரிகளை குறைகூறமுடியாது. மக்கள் தான் இதற்கு முழுப்பொறுப்பும் என தெரிவித்தார்.
எமது சுற்றுப்புற சூழலினை பாதுகாப்பது எமது கடமை. சிந்திப்போம் செயற்படுவோம்.

















