சீனாவில் பெய்து வரும் கடுமையான மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 3 மாடிக் கட்டிடம் ஒன்று அடியோடு சாய்ந்துள்ளது.
தெற்கு சீனாவின் யுலின் நகரில் கடுமையாக மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இவ்வாறு வௌ்ளம் சூழ்ந்த 3 மாடி கட்டிடம் ஒன்று அடியோடு சாய்ந்தது. இந்தக் கட்டிடம் அருகில் இருந்த பாலத்தின் மீது வீழ்ந்ததால் அப்பகுதிக்கான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
நிலைகுலைந்து வீழ்ந்த கட்டிடம் 2012 ஆம் ஆண்டு தான் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.






