
கொரோவபதான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மகள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கலேன்பிதுனுவெவ – அக்கரவிஸ்ஸ பிரதேசத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (26) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மனைவி காயமடைந்த நிலையில் அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குடும்பப் பிரச்சினை காரணமாக, உயிரிழந்த பெண்ணின் கணவரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மேலும், சந்தேகநபர் அப் பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். இவரைக் கைதுசெய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.





