வவுனியாவில் முன்னாள் போராளிகள் 8 பேர் சமூகத்துடன் இணைவு!!

421

 
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒரு வருடம் புனர்வாழ்வு பயிற்சிகளை நிறைவு செய்த 8 முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகள் இன்று(26.05.2016) காலை 10 மணிக்கு அவர்களின் குடும்பத்துடன் இணைத்து வைக்கப்பட்ட நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணிமனை புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் எல்.டீ.எம்.சி.ஜானக ரத்னாயக்கா, வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு பணிப்பாளர் எம்.எ.ஆர்.கெமிடேன், வவுனியா புனர்வாழ்வு நிலைய பொறுப்பதிகாரி பி.எ. குணசேகர, மற்றும் இராணுவ அதிகாரிகள், மூவின சமயத்தலைவர்கள், வவுனியா பூந்தோட்டம் பொலிஸ் நிலைய அதிகாரி, முன்னாள் போராளிகளின் உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

DSC04051 DSC04054 DSC04057 DSC04063 DSC04069 DSC04070 DSC04074 DSC04075 DSC04078 DSC04080