சகோதரனைக் கொன்றவரை 19 வருடங்கள் காத்திருந்து பழிவாங்கிய நபர்!!

588

Murded

சுவிட்சர்லாந்து நாட்டில் சகோதரனை குத்தி கொலை செய்தவரை 19 வருடங்களாக காத்திருந்து பழிவாங்கிய நபரின் குற்றத்திற்காக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சுவிஸின் St.Gallen மாகாணத்தில் உள்ள Walenstadt என்ற நகரில் பெயர் வெளியிடப்படாத இரு சகோதரர்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், 19 வருங்களுக்கு முன்னர் இளைய சகோதரர் அங்குள்ள தேவாலயம் ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அப்போது, சுவிஸ் குடிமகன்கள் மூவருக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மூவரில் ஒருவர் இளைய சகோதரரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, ‘தற்காப்பிற்காக தான் கொன்றதாக’ கூறியதால் கொலையாளிக்கு விடுதலை கிடைத்தது.
ஆனால், உயிரிழந்த நபரின் சகோதரர் தனது தம்பியின் கொலைக்கு பழிவாங்க வேண்டும் என சரியான நேரம் பார்த்து காத்திருந்துள்ளார்.

19 வருடங்களுக்கு பிறகு, கடந்த ஓகஸ்ட் 22, 2014ம் ஆண்டு கொலை செய்த நபர் தேவாலயத்திற்கு தொழுகைக்காக சென்றபோது அவரை மூத்த சகோதரர் பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

பின்னர், தொழுகையில் ஈடுப்பட்டிருந்த 51 வயதான அந்த நபரை சுமார் 7 முறை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த நபர் அங்கேயே உயிரிழந்துள்ளார்.

மூத்த சகோதரரை பொலிசார் உடனடியாக கைது செய்தனர். நபர் மீதான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. அப்போது, தம்பியை கொன்ற நபரை பழிவாங்கியது உண்மை தான் என அவர் நீதிபதிகள் முன்னிலையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

19 வருடங்களாக காத்திருந்து திட்டமிட்டு கொலை செய்த குற்றத்திற்காக தற்போது 52 வயதாகும் மூத்த சகோரருக்கு 18 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.